Tuesday, December 9, 2014



ருத்ராக்ஷம்: மகிமை
ஏகமுக ருத்ராக்ஷம்:
சிவ சொரூபம். இதனை அணிவதால் ப்ரும்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகிறது.
இருமுக ருத்ராக்ஷம்:
தேவ தேவனாகிய சிவசக்தி வடிவான ஸ்ரீ அர்த்த நாரீஸ்வர சொரூபமாகும். இதனை அணிவதால் புத்தி பூர்வம், அபுத்தி பூர்வம் என்னும் இரண்டு வகையான பாப வினைகள் நீங்குகிறது.
மூன்று முக ருத்ராக்ஷம்:
ஸ்ரீ திரேதாக்கினி ஸ்வரூபம். இதனை அணிவதால் ஸ்திரீஹத்தி (பெண்கொலை பாவம்) தோஷ நிவர்த்தி உண்டாகும்.
நான்கு முக ருத்ராக்ஷம்:
ஸ்ரீ பிரம்மா ஸ்வரூபம். இந்த ருத்ராக்ஷத்தை அணிவதால் நரஹத்தி தோஷ நிவர்த்தி உண்டாகும்.
ஐந்து முக ருத்ராக்ஷம்:
ஸ்ரீ காலாக்னி ருத்ர ஸ்வரூபம்; இதனை அணிபவருக்கு சிவ அனுக்ரகம் கிட்டும்.
ஆறுமுக ருத்ராக்ஷம்:
ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வரூபமானது. ஆறுமுக ருத்ராக்ஷத்தை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும். ஸ்ரீ சுப்பிரமணியர்- ஸ்ரீ விநாயகர் அருள் கிட்டும். இதனை வலது காதில் குண்டலமாகவோ அல்லது வலது புஜத்தில் அணிவது விசேஷ பலன்களைக் கொடுக்கும்.
ஏழுமுக ருத்ராக்ஷம்:
ஸ்ரீ ஆதிசேஷன் ஸ்வரூபம். இதனை அணிவோர்க்கு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி உண்டாகும். பெரும் சம்பத்து, ஆரோக்கியம், ஐசுவரியம், ஞானம், வாக்குத் தூய்மை போன்ற நல்ல சுகபோகங்கள் வாய்க்கும்.
எட்டுமுக ருத்ராக்ஷம்:
இது ஸ்ரீ மஹாகணபதி ஸ்வரூபம். அஷ்ட வசுக்களை தெய்வமாகக் கொண்ட எட்டுமுக ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு பலவகையான தோஷங்கள் நீங்குகின்றன.
ஒன்பதுமுக ருத்ராக்ஷம்:
இதனை ஸ்ரீ காலபைரவ ருத்ராக்ஷம் எனவும் கூறுவார். இது சிகப்பு நிறமுடையதாக இருக்கும். இதன் அதிர்ஷ்ட தேவதை அம்பிகை. இதனை இடது கையில் தரிப்பவர்கள் சிவ ரூபமாகவே கருதப்படுகிறார்கள். புத்தி முத்திகளை கொடுக்க வல்லது.
பத்துமுக ருத்ராக்ஷம்:
இது விஷ்ணு ச்வரூபமாகும். தச திக்குகளுக்கு தேவதைகளின் சொரூபமாக விளங்கும் இந்த ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு அந்தந்த தேவதைகளின் ப்ரீதி கிட்டும். கிரஹதோஷங்களையும், பூத பேய் பிசாசுகளை விரட்டும். சர்ப்ப விஷங்களையும் போக்கும்.
பதினோரு முக ருத்ராக்ஷம்:
இது ஸ்ரீ ஏகாதச ருத்ரரின் ச்வரூபமாகும். இந்த ருத்ராக்ஷத்தின் பதினொரு முகங்களும் பதினொரு ருத்ர ஸ்வரூபங்களைக் குறிக்கும். அவை: போலி - பிங்கள - பீம - விரூபாக்ஷ - வியோகித - சாஸ்தா - அஜபாத - அஹிர்புத்தீய - சம்பு - சண்ட - பவ. இதனை சிரசில் தரிப்பதால் ஆயிரம் அஸ்வமேத யாகங்களை நடத்திய பலனும், கோடி கோதானம் செய்த பலனும் உண்டாகும்.
பன்னிருமுக ருத்ராக்ஷம்:
ஸ்ரீ துவாதசாதித்யர் ஸ்வரூபம். இதனை அணிபவருக்கு ஸ்ரீமகாவிஷ்ணுவின் ப்ரீதி உண்டாகும். கோமேதகம், அஸ்வமேத யாகம் செய்த பலன்கள் உண்டாகும். துஷ்ட மிருகங்களால் துன்பம் ஏற்படாது. இதனைக் காதுகளில் அணிவது விஷேஷ பலனைத் தரும்.
பதின்மூன்றுமுக ருத்ராக்ஷம்:
இந்திர ஸ்வரூபம். இந்த ருத்ராக்ஷத்தை ஸ்ரீசதாஷிவ ஸ்வரூபம் என்றும் ஸ்ரீ ஷண்முக ஸ்வரூபம் என்றும் கூறுவர். இந்த ருத்ராக்ஷ மாலையை அணிவதால் சர்வ கார்ய சித்தி உண்டாகும்.
பதிநான்குமுக ருத்ராக்ஷம்:
இந்த ருத்ராக்ஷத்தை ஸ்ரீ ருத்ரமூர்த்தி சொரூபம் எனவும், ஸ்ரீஹனுமான் சொரூபம் எனவும் கூறுவர். இது கிடைப்பது மிகவும் அரிது.

No comments:

Post a Comment